பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

காட்டு வழிதனிலே

இளமை வாழ்கென்று கூத்திடுவோமடா

இளமை வெல்கென்று கூத்திடுவோமடா

என்று கவிஞன் பாடுகிறான்.

இளைஞர்களே, எழுந்து முன் செல்லுங்கள். எதிர்காலம் உங்களுடையது. அதை உங்கள் சீரிய குறிக்கோள்களால் ஒப்பற்றதாகச் செய்யுங்கள். வையப்பரப்போடு வானப்பரப்பும் உங்களுடையது. வாழ்க இளமை !