பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

காட்டு வழிதனிலே


அகாஜமிளோ கீமன் என்ற நங்கையின் காதல் இபன் மேல் கோபங் கொண்டு, "நாளை முதல் உன்னைக் கண்ணெடுத்தும் பாரேன்" என்று கூறிச் சென்றபோது அவள் பாடியது:

காதலா, நாளை நீ என்னை மறந்திடுவாய்;
இன்று நீ என்னை நினைந்துள்ள போதே

என்னுயிர் தான் ஏகாதோ!

வேபேர் ஆண்மகன் தன் மனைவியாலுள்ள காதலை ஒரு கவியால் வெளியிடுவதைப் பாருங்கள்:

மனைவிபால் அன்பு
மிதந்துள்ள தம்மா
ஆஹா... நான் குடிக்கும் தண்ணீரில்
அவளுடைய நளின முகம் காண்கிறதே
ஒரு கணமும் அவளை

மறக்க முடியாதே.

நிப்பான் நாட்டைப் பார்த்து மகிழ்ந்த சுவாமி விவேகானந்தர் அதன் அழகையும், மக்களின் கலை உணர்ச்சியையம் வெகுவாகப் பாராட்டியிருக்கின்றார்; இங்கே காண்பித்துள்ள கவிகளைப் போன்ற பல கவிகளைப் படித்து மகிழும்போது அவர்களுடைய கவிதை உள்ளத்தையும் நம்மால் பாராட்டாமலிருக்க முடியாது. காற்றுப் போலே கவிதை நிறைந்த நாடல்லவா நிப்பான் ?