அடிகளின் தோற்றம்
உலகத்திலே பெரிய மகான்கள் தோன்று கிருர்கள். சிறந்த உபதேசங்களைச் செய்கிருர்கள். அவர்கள் வாழ்ந்த நாட்டிற்கும் காலத்திற்கும் மட்டு மல்ல அவ்வுபதேசங்கள். என்றும் நிலைபெற்ற வாழ்க்கை நெறியாக நிற்க வேண்டிய உயரிய எண் ணங்களை அவர்கள் உலகிற்கே வழங்கிவிட்டுச் செல் கிருர்கள். ஆனால், அவர்களுடைய பெருமையையோ, அவர்கள் எடுத்துரைத்த கருத்துக்களின் அருமை யையோ மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வதில்லை. யாரோ ஒரு சிலர் மட்டும் ஓரளவிற்கு அறிகிருர்கள். அறிந்து அவர்களைப் போற்றுகிருர்கள். அவர்கள் காட்டிய நெறியிலே நிற்க முயல்கிருர்கள். ஆண்டுகள் செல்லச் செல்லத்தான் மகான்களின் பெருமையை உலகம்உணர்ந்து கொள்ள முடிகிறது. விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. அதன் காரணமாக மக்களின் அறிவுத் திறன் மிக ஓங்கிவிட்டதென்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிருேம். ஆனல் நான் மேலே கூறிய விஷயத்தைக் கவனிக்கிறபோது நம் அறிவு அவ்வளவு சிறப்பாகக் கூர்மையடைந்து விட்டதாகச் சொல்வதற்கில்லை. -
காந்தி அடிகள் இவ்வுலகத்திற்கு வந்தார். அவர் இந்த நாட்டிலே பிறந்ததற்காக நாம் பெருமை கொள்கிருேம். அவர் நமக்குச் சுதந்திரம் வாங்கித்
பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/63
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
