பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிகளின் தோற்றம்

69


ஒரு குடும்பமாகிவிடாது. உள்ளம் உலகத்தைதே அன்பால் பிணிக்கவேண்டும். அதற்கு முதலில் அண்டை வீட்டானை நேசித்துப் பழகவேண்டும். அவ்வாறு செய்வதால் காந்தியடிகள் நமக்கு அளித்த சுதந்திர இந்தியாவை உன்னத நாடாக மாற்றுவதோடு உலகத்திலே மானிட சாதி இன்புற்று வாழ வழி கண்டவர்களாவோம். அடிகள் உலகத்திற்குச் செய்த எச்சரிக்கை வீண் போகாமல் இருப்பதற்கு நம்மால் இயன்ற பணியைச் செய்வோம் என்று நாம் உறுதி கொள்வோமாக. வாழ்க காந்தியம்!