பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 201

சொன்னதாக, அவரிடம் சொல்லு பாவம், இந்த மாதிரிக் காரியங்களிலும் தனக்கு ஈடுபாடு உண்டு என்று அவர் ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தால் எத்தனையோ வகையில் அவருக்கு நான் உதவியாயிருந்திருப்பேன்; சொல்லாமல் இருந்துவிட்டார் என்று கூட சர்மாஜி என்னிடம் சொன்னார். நான்தான் நீங்களா அவர் சொல்வதை யெல்லாம் செய்கிறீர்கள் என்று அவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லவில்லை!”

‘இதிலிருந்து அவர் என்னைக் கள்ளக் கடத்தல் பேர் வழியாகவே ஆக்கிவிட்டார் என்றல்லவாத் தோன்றுகிறது?” ‘ஆக்கியதோடு நிற்கவில்லையே! அதற்காக உங்களிடம் அனுதாபம் வேறு காட்டுகிறார் பாருங்கள், அதில்தான் இருக்கிறது அவருக்கே உரித்தான அந்த நரித்தனத்தின் அழகு’

‘என்ன கேவலமான மனிதர்கள், என்ன கேவலமான மனிதர்கள் இவ்வளவும் எதற்காக? சுலபமாகப் பணம் பண்ணுவதற்காக! இத்தகையவர்களிடம் போய், உலகில் அதர்மம் மறைந்து தர்மம் தலை தூக்க வேண்டுமானால் நீங்களும் ஏழைகளைப்போல் மாட மாளிகைகளை மறந்து மண்குடிசை கட்டிக் கொண்டு வாழுங்கள்; நன்செய் தானியங்களை மறந்து புன்செய் தானியங்களைச் சாப்பிடுங் கள்; பட்டாடை நீக்கி பருத்தி ஆடை உடுத்துங்கள்’ என்று சொன்னால் கேட்கவாப் போகிறார்கள்? சட்டத்தைக் கொண்டே இவர்களை வழிக்குக் கொண்டு வர முடியவில்லையென்றால், சன்மார்க்கத்தைக் கொண்டா இவர்களையெல்லாம் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியப் போகிறது? எனக்குத் தோன்றவில்லை சங்கர், எனக்குத் தோன்றவேயில்லை’

‘அந்தப் பாவிகளுக்காக நீங்கள் வழக்கம்போல் அழ ஆரம்பித்துவிடாதீர்கள், சார் அதற்கு இது சமயமும் அல்ல. போசாமல் மோகன் சார் அப்பாவிடம் போய் விஷயத்தைச்