பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 279

அதை எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் தெரிந்துக் கொள்ள முடியும்? நாளடைவில் வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம். அதற்கு வேண்டிய பொறுமை அவளுக்கு என்னமோ இருக்கத்தான் இருந்தது. ஆனால் அவள் அப்பாவுக்கு?

இருக்குமா? இருக்க முடியுமா? செத்தாலாவது அவர் தன் மகளோடு தன்னுடைய ஆசைகளையும் சேர்த்து எரித்து விடுவார் உயிராயிருந்தால் ...

வம்புக்கு நிற்காமல் விடுவாரா? அதுதான் யோசனையா யிருந்தது அவளுக்கு. அதற்காகவே அவள் ஓரளவு அவசர உணர்ச்சிக் கூடக் காட்டினாள், அந்த விஷயத்தில் அவரும் அதைப் புரிந்து கொள்ளக் கூடியவர்தான். ஆனால் தன்னைப் பற்றி ஒன்றுமே தெரிந்துக் கொள்ளாமல் அவரால் அதை எப்படிப் புரிந்துக் கொள்ள முடியும்?

தன் உணர்வுப் பெற்ற பிறகாவது அவர் தன்னைப் பற்றி ஏதாவது கேட்பார், அதற்குப் பிறகுத் தான் நடந்தவற்றைச் சொல்லி, அவருடையப் பரிபூரணப் பாதுகாப்பைக் கோரலாம் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவரோப் பொழுது விடிந்தப் பிறகுகூட அவளுடைய உடல் நலனில்தான் கவனம் செலுத்தினாரே தவிர, உள நலனில் கவனம் செலுத்தவில்லை!

முதல் நாள் இரவு அவளாகவே தன் உள்ளத்தை அவரிடம் ஓரளவு திறந்து காட்டியபோதுக் கூட, அவருடைய உதடுகள்தான் அசைந்தனவே தவிர, உள்ளம் அசைய வில்லை!

இதனாலெல்லாம் அவர்மேல் அவள் கொண்ட மதிப்பு உயர்ந்தாலும், அந்த மதிப்புக்கு முன்னால் தன்மானம் இறங்குவதுபோல் தோன்றிற்று அவளுக்கு. ஆகவே, அன்று மாலைவரையிலாவது அவரைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தபோது, ‘இந்த உலகத்தில் சாகத் தூண்டுபவர்கள் மட்டும் இல்லை,