56 காதலும்கல்யாணமும்
“வேடிக்கையான மனிதன், நீ!’ ‘சங்கர் கூட அப்படித்தான் சொல்கிறான்.ஒருவேளை அதனால்தான் என்னுடைய நடத்தை சில சமயம் விபரீதமாகக் கூடப் போய்விடுகிறதோ, என்னமோ?உதாரணமாக, உன் காதலிக்கு முன்னால் அன்று நான் அவனை அடித்திருக்கக் கூடாது, இல்லையா?”
மோகன் சிரித்தான்; ‘ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டான் மணி.
‘ஒன்றுமில்லை; அன்று நீ எனக்காக அவனை அடித்து வீழ்த்தியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும், தெரியுமா? நான் அவளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு ஒடிப் போயிருப்பேன்; அன்றிலிருந்து அவளும் என்னைத் திரும்பிப் பார்க்காமல் போயிருப்பாள்”
‘இன்று?” ‘வெட்கப்படுகிறேன் மணி, அதை நான் உன்னிடம் சொல்ல வெட்கப்படுகிறேன்”
‘அதற்குத்தான் பெண்கள் இருக்கிறார்களே, நீ ஏன் வெட்கப்படுகிறாய்?-சும்மா சொல்லு?”
‘சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டாயே?” ‘மாட்டேன்! ஏனெனில், நான் எப்போதுமே காதலர் களை என்னுடைய கோபத்துக்கு உரியவர்களாகக் கருதுவதில்லை; அனுதாபத்துக்கு உரியவர்களாகவே கருதுகிறேன்’
‘அந்த நம்பிக்கையில்தான் நானும் உன்மேல் இல்லாததும் பொல்லாததும் சொல்லி, என்னுடைய காதலைப் புதுப்பித்துக்கொண்டிருக்கிறேன்!”
‘அடி சக்கை புதுப்பித்துக் கொள்ளக் கூட முடியுமா, அதை?’
‘முடியும், உன்னைப் போன்றவர்கள் உதவினால்'