பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 63

கொள்ள வாய்ப்பளிக்கும் கடமை உணர்வுகளில் ஒன்றாயிருக்குமா?

அவன் தன் பொறுப்பை உணர்ந்து அவளைக் காதலிக்கிறானா? இல்லை, பொறுப்பை உணராமலே காதலிக்கிறானா? அவர்களுடைய காதலுக்கு வித்திட்டது எதுவாயிருக்கும்?-இனக் கவர்ச்சியாயிருக்குமா? அல்லது, இதயக் கவர்ச்சியாயிருக்குமா?

ஒரு வேளை இனக் கவர்ச்சியாயிருந்து, அந்தக் கவர்ச்சி குறைந்ததும் அவன் அவளைக் கைவிட்டுவிட்டால்?தன்னுடைய நிலையை விட மோசமாகவல்லவா போய்விடும் அவளுடைய நிலை?-இருக்காது. அவர்களுடைய காதலுக்கு வித்திட்டது இனக்கவர்ச்சியாயிருக்காது; இதயக் கவர்ச்சியாய்த்தான் இருக்கும்...

அப்படிப்பட்ட அழகியா என்ன, தன் தங்கை? இனக்கவர்ச்சி அவர்களுடைய காதலுக்கு வித்திட9கதைகளில் காணும் ஏழைப் பெண்கள் வேண்டுமானால் அழகாயிருக்கலாம்; வாழ்க்கையில் காணும் ஏழைப் பெண்கள் அழகாகவா இருக்கிறார்கள்?-ஊஹாம், அவர்களுடைய வயிறு வாடும்போது முகமும் வாடித்தானே விடுகிறது?

ஆனால், இதயக் கவர்ச்சி மட்டும் அவர்களுடைய காதலுக்கு எப்படி வித்திட்டிருக்குமாம்? ஒரு வேளை சேர்ந்தாற் போல் சில நாட்களாவது பழகும் வாய்ப்பு...

நினைத்ததை முடிக்கவில்லை, அவள். அதற்குள் அடுப்பின் மேலிருந்த தண்ணிர் கொதிக்க ஆரம்பித்துவிடவே, காபித்துளை எடுத்து அதில் போட்டுக் கீழே இறக்கி வைத்துவிட்டு, அடுத்தாற்போல் பால் சட்டியை எடுத்து அடுப்பின் மேல் ஏற்றிவிட்டு, அவசரம் அவசரமாகக் குளிக்கும் அறைக்குச் தென்றாள்.