பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

போராட்டத்தில் உயிர் கொடுத்த சாமி காகப்பனும், குமாரி வள்ளியம்மையும் தமிழர்களே என்று நாம் பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்.

காங்தியடிகள் தமிழ்மொழியைப் பற்றியும் தமிழ் மக்களைப் பற்றியும் ஆங்காங்கு கூறிய சொற்களைக் கீழ்க் கண்டவாறு தொகுத்திருக்கிறேன் :

“தென்னப்பிரிக்க உரிமைப் போரில் தமிழ் மக்கள் புரிந்த துணையைப் போல வேறெவ் விந்தியரும் புரிய வில்லை. அவர்கட்கு நன்றி செலுத்த அவர்கள் நூல்களைப் பயில வேண்டு மென்று எண்ணினேன். அப்படியே, அவர்கள் மொழி பயில்வதில் மிக ஊக்கமாக ஒரு திங்கள் கழித்தேன். அம்மொழியைப் பயிலப் ப யி ல அதன் அழகை உணரலானேன். அது உள்ளத்தைக் கவரும் ஓரினிய மொழி. தமிழ் மக்களுள் பண்டை நாளிலும் இங் காளிலும் கூடப் பல அறிஞர் இருந்தனர்-இருக்கின்றனர் என்ற உண்மை அம்மொழியின் அமைப்பாலும், பயிற்சி யாலும் அறியக் கிடக்கின்றது. இங்திய மக்கள் இமய முதல் குமரி வரை ஓரினமாக வாழவேண்டுமானல், தமிழ ரல்லாத மற்ற மொழியினரும் தமிழுணரல் வேண்டும்.”

“ஆங்கிலம் பயில்வதற்கு முன்னர்த் தமிழ்மொழி பயி லல் வேண்டுமென்று நான் பன்முறை பகர்ந்திருக்கிறேன். 1915-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலத்தினும் தமிழ்மொழி யைச் சிறப்பாகக் கொள்ளுமாறு தமிழ் மக்களை வேண்டிக் கொண்டேன்; தாய்மொழியில் பேசுமாறும், தாய்மொழி நூல்களைப் பயிலுமாறும் மக்களே வேண்டிக்கொண்டேன். இருபது ஆண்டுகட்கு முன்னரே யான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம், திருக்குறன் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டுமென்று என் உள்ளத்தெழுந்த அவாவேயாகும். தமிழ்மொழியில் புலமை பெறுதற்குரிய ஓய்வு எனக்கு ஆண்டவன் அருளினிைல்ல. அது குறித்து யான் உறும் வருத்தத்துக்கோர் அளவில்லை.