234
இங்திய காடு சென்று கல்விக்கூடங்களில் சேர்ந்தும் கற்றார். இதல்ை அரிலால் அவ்வளவாக தன்மையடையவில்லை. அவருடைய எதிர்கால வாழ்க்கையும் போற்றத் தகுந்ததாக அமையவில்லை.
மற்ற மூன்று மக்களும் தங்தையின் சொற்களே மீறி கடக்கமாட்டார்கள், தந்தையின் சொற்படியே கேட்டுக் கல்வி பயின்றார்கள். பிள்ளைகளுக்குப் புத்தகப் படிப்பே வேண்டியதில்லை என்பது காந்தியடிகளின் கருத்தன்று. ஆளுல் அக்காலத்தில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்வி கற்பிக்கப்பட்ட முறையை வெறுத்தார். எனவே, தம் குழங்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க மட்டும் ஒரு ஆங்கில ஆசிரியையை ஏற்பாடு செய்துவிட்டு, மற்ற பாடங் களேத் தாமே கற்பித்தார். வீட்டிலே கிதானமாக அமர்ந்து பாடங்களைக் கற்பிப்பதற்கு அவருக்கு நேரம் கிடையாது. அவர் குடியிருந்த வீட்டிற்கும் அவருடைய அலுவலகத் துக்கும் இரண்டரைக் கல் தொலைவு இருக்கும். தம் மக்களேயும் அலுவலகத்திற்கு உடன் அழைத்துச் செல்வார். போகும்போதும் வரும்போதும் வழியில் அவர்களுக்கு உரை யாடலின் மூலமாகக் கல்வி கற்பிக்கலானர். நாள்தோறும் ஐந்து கல் நடப்பது அவர்களுக்குச் சிறந்த உடற்பயிற்சி யாகவும் அமைந்தது. ஆனல் இக்கல்வியும் தொடர்ந்து கடைபெற இயலவில்லை. காங்தியடிகள் அரசியற் போராட் டங்களில் அடிக்கடி ஈடுபட வேண்டியிருங்ததால், இக் கல்வியும் தடைப்பட்டது.
இதுபற்றிக் காந்தியடிகள் தம்முடைய வாழ்க்கை வரலாற்றில் பின்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
- தக்க இலக்கியக் கல்வி என் மக்களுக்குத் தர முடி யாமல்போனது அவர்களுக்கும் எனக்கும் துயரங் தரும் செயலேயாகும். என் மூத்தமகன் அளிலால் என்முன் தனிமையிலும், செய்தித்தாள்களில் வெளிப்படையாகவும்