பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

துண்டுப் பிரசுரத்தில் அச்சிட்டு முச்சந்தியில் கிண்று கொண்டு கிருத்தவசமயத்தைப் பரப்பும் சாதாரணப் பாதிரி முதல், வாடிகன் அரண்மனை*யில் வீற்றிருக்கும் போப்பாண்டவர் வரை, இவ்வுயர் மொழியைக் கூறிப் பெருமையடையாதவர் எவருமிருக்க முடியாது. ஆனல் நடைமுறையில் காண்பதென்ன? இவ்வேசுவின் வழி கிற்கும் மேலே நாட்டுக் கிருத்தவரே, அணுகுண்டையும், நீர்வளிக் குண்டை (Hydrogen bomb)யும், கண்டத்தை விட்டுக் கண்டம் பாயும் பறக்கும் குண்டையும் உருவாக்கி உலகத்தைச் சுடுகாடாக்குகின்றனர். கிருத்தவ சமயத்தைச் சாராத பிறமக்களே அஞ்ஞானிகள்’ என்று கூறுவதில் இவர்கள் இன்பம் காண்கின்றனர். திருவள்ளுவரையே ஒரு பாதிரியார் அஞ்ஞானி என்று கூசாமல் கூறுகிரு.ர். அப்பாதிரி திருக்குறளைப் படித்தவர். அதன் உயர்வை உணர்ந்தவர். ‘திருவள்ளுவர் அஞ்ஞானியாக இருந்தாலும். அவர் காக்கு மட்டும் நரகத்திற்குப் போகாது’ என்று அவர் திருவாய் மலர்ந்தருளுகிறார். அவர் ஏன் அவ்வாறு கூறினர் தெரியுமா? கிருத்தவரல்லாத பிறசமயத்தார் யாவரும் அஞ்ஞானிகள் என்பது கிருத்தவ சமயக் கொள்கை. அவர்களுக்குப் பரலோக சாம்ராஜ்யம் கிட்டாது என்பதும், அவர்களுடைய அசைக்க முடியாத கொள்கை. எனவே வேற்றுச் சமயத்தைச் சார்ந்த வள்ளுவர் நரகம் செல்வது உறுதி. ஆனல் உயர்ந்த அற நூலேப்பாடிய காரணத்தால் வள்ளுவருடைய நாக்குமட்டும் கரகத்திலிருந்து தப்பி வீடு பேற்றை அடையும் என்பது அப்பாதிரியாரின் அதிசயக் கண்டுபிடிப்பு. ஐரோப்பாவில் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன் கிருத்தவ சமயத்தின்

  • வாடிகன் அரண்மனை (Vatican City) உரோமாபுரியின் ஒரு பகுதி. போப்பாண்டவர் வாழ்விடம்.
  • Though Valluvar is a Heathen his tongue never go to hell.