பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சிறந்த புத்தகம் . 59

சக்திகள் எல்லாம் சுதந்திரமாக சிருஷ்டி செய்யவும், கட்டுப்பாடின்றி உழைக்கவும் விழிப்புற்று எழப்போகிற தருணத்திலேயே நாம் இருக்கிருேம். இதுதான் உண்மை. இது நமக்கு ஆறுதல் அளிப்பதோடு, நம்முள் புதிய பலத்தையும் துணிவையும் புகுத்த வேண்டும்.

மா. கார்க்கி

மேலே உள்ளது பதினேங்து வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்டதாகும். ஐரோப்பிய முதலாளிகள் ஏராள மாக வழங்கிய ஆயுதங்களைத் தாங்கிய ரஷ்ய உற்பத்தி யாளர்கள், கிலப்பிரபுக்கள் முதலியவர்களின் இராணுவங் களேயும், பிறகு கொழுப்பிலும் உணர்ச்சியிலும் தங்கள் தோழர்களாய் விளங்கியவர்களுக்கு உதவியாக ஐரோப் பிய வியாபாரிகளுக்கு அனுப்பிய போர்ப்படைகளையும் எதிர்த்து, பட்டினியால் கஷ்டப்பட்ட பாட்டாளிகளும் தொழிலாளிகளும் விவசாயிகளும் நடத்திய யுத்தத்தின் வெற்றிகரமான முடிவைக் கண்டதுயரமும் பட்டினியும் நிறைந்த - வருஷத்தில் அது எழுதப்பட்டது. கழுதைகள் மீது சவாரி செய்து வந்த குதிரை வீரர் பகுதி ஒன்றும் அப் போர்ப்படைகளின் நடுவே காணப்பட்டது! .

இப்பதினேங்து வருஷ காலத்தில், ஜார் ஆட்சியைச் சேர்ந்த ரஷ்யாவிலும் அதன் அடிமை நாடுகளிலும் உள்ள. பாட்டாளி மக்கள், சலியாத-அற்புதமான உழைப்பினுல் எல்லேயற்றதும் கல்வி அறிவற்றதுமான மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பை - அரை குறை தரித்திரர்களான விவசாயி களும் அறிவற்ற காட்டுமிராண்டிகளாகவும் பேராசை பிடித்தவர்களாகவும் விளங்கிய குட்டி முதலாளிகளும் வசித்த பிரதேசத்தை - பல தேசங்கள் கொண்ட சோஷலிஸ் சகோதரத்துவ அமைப்பாக மாற்றியிருக் கிருர்கள். . . . . . . . .