பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராட்டைப் பாட்டு

99

 அந்த அரைக் காசை எடுத்துக்கொண்டு அவள் ஆற்றங் கரைக்குப் போகிறாள். எதற்காக? மீன் வாங்க. வகை வ்கையான மீனெல்லாம் வாங்கிக்கொள்கிறாள்.

அரைக்காசைக் கொண்டுக்கிட்டு
ஆற்றங் கரைக்குப் போனளாம்
பேயாமழையும் பெய்ததாம்
பெரியவெள்ளம் வந்ததாம்
ஏருமீனும் ஏறிச்சாம்
அயிரை மீனும் வந்ததாம்
அயிரைமீனு அரைக்காசு
ஆறாமீனு அரைக்காசு
கெண்டைமீனுக் காக்காசு
கெளுத்திமீனுக் காக்காசு
குச்சுமீனுக் காக்காசு
குரத்திமீனுக் காக்காசு

இப்படி மீனெல்லாம் வாங்கிக்கொண்டாள். வீட்டுக்குப் புறப்பட்டாள். வழியிலே போகிறவர்களேயெல்லாம் தன் கணவனைப்பற்றி விசாரிக்கிறாள். தன் கணவனைப்பற்றி விளக்கமும் கொடுக்கிறாள்.


மீனெல்லாம் வாங்கிக்கிட்டு
வீட்டுக்குத்தான் புறப்பட்டாள்
முன்னால்போகும் பெண்டுகளே
பின்னால் தங்கும் பெண்டுகளே
என்புருசன் வல்லரக்கன்
எதிரேவரக் கண்டீரோ