பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனோரஞ்சிதம் பாலா

105

 ஆனால், பாட்டைப்போல மற்றவையெல்லாம் அத்தனை சுவையாக இரா. மறுபடியும் ஏதாவது பாட்டுப் பாடும்படி கேட்பார்கள்.

இந்தத் தடவை அத்தை மகனாகப் பாட்டுக்காரன் வருகிறான். அவன் கோட்டைக்குப் போகிறான்: மதுரைக்குப் போகிறான்; அவனிடத்திலே ஒரு பெண் உரிமையோடு தனக்கு வேண்டியவற்றை வாங்கி வரும்படி சொல்லுகிறாளாம்.


கோட்டைக்குப் போறவரே-அத்தை மகனே
கொண்டைச் சிப்பு வாங்கிவாங்கோ--அத்தை மகனே
வாங்காமல் வந்துவிட்டால்-அத்தை மகனே
மனசெனக்குக் குளிராது-அத்தை மகனே
மரதைக்குப் போறவரே-அத்தை மகனே
மல்லிகைப்பூ வாங்கிவாங்கோ-அத்தை மகனே
வாங்காமல் வந்துவிட்டால்-அத்தை மகனே
மனசெனக்குக் குளிராது-அத்தை மகனே
பட்டணமே போறவரே-அத்தை மகனே
பட்டுச்சேலை வாங்கி வாங்கோ-அத்தை மகனே
வாங்காமல் வந்துவிட்டால்-அத்தை மகனே
மனசெனக்குக் குளிராது-அத்தை மகனே