பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒன்று பத்து நூறு

113

பொன்னச்சி கதவுதிற
பொன்மயிலே வீடுதிற -
நானெப்படி நான் திறப்பேன்
நடுச்சாமம் வந்தாலே

ரண்டாம்பனை ஏறுபனை
ஒலைவெட்டி நார் உரிச்சு
நானும் வந்தேன் பொன்னச்சி
நடந்தலுத்தேன் பொன்னச்சி
பொன்னச்சி கதவு திற
பொன்மயிலே வீடுதிற
நானெப்படி நான் திறப்பேன்
நடுச்சாமம் வந்தாலே....

மூளும்பனை ஏறுபனை
ஒலைவெட்டி நார் உரிச்சு
நானும் வந்தேன் பொன்னச்சி
நடந்தலுத்தேன் பொன்னச்சி
பொன்னச்சி கதவு திற
பொன்மயிலே வீடுதிற...
நானெப்படி நான் திறப்பேன்
நடுச்சாமம் வந்தாலே...

இந்தக் கணக்கு ஒரு கப்பல் பாட்டிலும் வருகிறது. கிளியாக இருந்தால் என்ன, கப்பலாக இருந்தால் என்ன? பாட்டின் இசையும் அதன் கற்பனையுந்தான் முக்கியம்.

8