பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

காற்றில் வந்த கவிதை


ஒருத்திக்கு வாழ்க்கையே கசக்கிறது. காய்ச்சின பாலும், கையால் தொட்ட தேனும் பிடிக்கவில்லை. பாலும், தேனும் கசக்கும்படி அவளுக்கு வாழ்க்கையில் வெறுப்பு.

மாரியம்மன் பல்லக்கில் பவனி வருகிறாள் என்கிற சேதியை அவளிடம் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள். அந்தச் சேதி அவளுக்குப் புதிய உயிர் கொண்டு வருகிறது. பொன்னை மாரியம்மன் அவளுடைய துன்பத்தையெல்லாம் போக்காதிருப்பாளா?

மாரியாத்தாக்காரன் என்று ஒருவன் கிராமத்திலே காட்சியளிப்பான். தலையிலே ஒரு சிறு பெட்டியிலே மாரி யாத்தாளின் உருவமிருக்கும். பம்பை என்கிற ஒரு வாத்தி யத்தை பூம் பூம் என்று வாசித்துக்கொண்டு அவன் வருவான். பெட்டியை ஊர்ச்சாவடிக்குப் பக்கத்திலே வைத்துவிட்டு வாத்தியத்தை முழக்குவான்? மாரியம்மனின் பெருமையைப் பாட்டிலே தெரிவிப்பான்.

ஆதிபராபரியே ஆளவந்த ஈஸ்வரியே
ஆயிரங்கண்ணலே ஆளவந்த ஈஸ்வரியே
கூடத் துணையிருந்து ஈஸ்வரியே காருமம்மா
பக்கத் துணையிருந்து ஈஸ்வரியே காருமம்மா
ஆருகடன் நின்றாலும் மாரி கடனாகது
மாரி கடன் தீர்த்தவர்க்கு மனக் கவலை தீருமம்மா
தாய் படி தந்தவர்க்குச் சங்கடங்கள் தீருமம்மா
மாரி படி தந்தவர்க்கு மனக் கவலை தீருமம்மா

மாரியாத்தாக்காரனுடைய சிறிய பெட்டியிலேயும் தெய்வ முகம் கண்டு மக்கள் ஆறுதல் பெறுவார்கள்.