பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

காற்றில் வந்த கவிதை

ஏழுமலை கடந்து-பெண்ணே
எடுத்து வந்தேன் செண்பகப் பூ

வாடாமலே குட்டிடுவோம்-நாமும்

வடமதுரைச் சொக்கருக்கே

காதலிக்குச் சூட்டுவது இன்பம்; கடவுளுக்குச் சூட்டுவது மிகமிகப் பெரிய இன்பம். கடவுளைப் பற்றிய நினைவிலே காதலும் நிறைவெய்துகிறது என்பதை அறிந்து கொள்வது வாழ்க்கையின் பெரிய சாதனையல்லவா?





*