பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

காற்றில் வந்த கவிதை

பணத்தைப் போல மின்னி மின்னிப்
      பட்டனமெல்லாம் பெய்யுமாலோ
பெய்யுமாலம்மா பெய்யுமாலோ
      பேயா மழை பெய்யுமாலோ
நல்ல மழை பெய்யுமாலம்மா
      நாடு செழிக்கப் பெய்யுமாலோ
பெய்யுமாலம்மா பெய்யுமாலோ
      பேயா மழை பெய்யுமாலோ

[பெய்யுமால்-பெய்யும்; ஆல் என்பது அசை பேயா மழை-இதுவரை பெய்யாத அவ்வளவு பெரிய மழை. காசு போலே-பொற்காசு போலே. பணத்தைப் போலேவெள்ளிப் பணத்தைப் போலே.]

மழை பெய்கின்ற பருவம் பார்த்துத்தான் மழைப் பாட்டுக்காரர்களும் வருவார்கள். ஆதலால் அவர்கள் வாக்குப் பெரும்பாலும் பொய்யாகாது.

உழவனுடைய உள்ளம் எப்பொழுதும் தாராளமானது. புடன் செழிக்க வழி பிறக்கின்றதென்ருல் அவன் உள்ளம் பூரித்துப் போவான். பிறகு தானியம் பிச்சை போடுவதில் அவன் தயங்குவானா?