பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

காற்றில் வந்த கவிதை

பணத்தைப் போல மின்னி மின்னிப்
      பட்டனமெல்லாம் பெய்யுமாலோ
பெய்யுமாலம்மா பெய்யுமாலோ
      பேயா மழை பெய்யுமாலோ
நல்ல மழை பெய்யுமாலம்மா
      நாடு செழிக்கப் பெய்யுமாலோ
பெய்யுமாலம்மா பெய்யுமாலோ
      பேயா மழை பெய்யுமாலோ

[பெய்யுமால்-பெய்யும்; ஆல் என்பது அசை பேயா மழை-இதுவரை பெய்யாத அவ்வளவு பெரிய மழை. காசு போலே-பொற்காசு போலே. பணத்தைப் போலேவெள்ளிப் பணத்தைப் போலே.]

மழை பெய்கின்ற பருவம் பார்த்துத்தான் மழைப் பாட்டுக்காரர்களும் வருவார்கள். ஆதலால் அவர்கள் வாக்குப் பெரும்பாலும் பொய்யாகாது.

உழவனுடைய உள்ளம் எப்பொழுதும் தாராளமானது. புடன் செழிக்க வழி பிறக்கின்றதென்ருல் அவன் உள்ளம் பூரித்துப் போவான். பிறகு தானியம் பிச்சை போடுவதில் அவன் தயங்குவானா?