பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

காற்றில் வந்த கவிதை

கொள்ளை மழை பெய்ய வேணும்" என்று பாடத் தோன்றுகிறது அவர்களுக்கு.

மழையை நாடி மழைக் கஞ்சி குடிக்கும் வழக்கத்தை ஒரு நாடோடிப் பாடலிலே பார்த்தோம். மற்ருெரு நாடோடிப் பாடல் மழைக்கு அதிபதியான தேவனைப் பரிந்து வேண்டிக்கொள்வதாக அமைந்திருக்கின்றது. 'வான மகா தேவா, மழையாய்ப் பொழிய வேணும்' என்று மக்கள் விண்ணப்பம் செய்து கொள்கிரு.ர்கள். வட்டிக்குக் கடன் வாங்கி வயலையும் அடகு வைத்துவிட்டார்கள். வட்டி பெருகிக்கொண்டே இருக்கிறது. கடனைத் தீர்க்க வழி யொன்றும் ஏற்படவில்லை. மழை பொழிந்து பயிர் செழித் தால்தானே கடனைத் தீர்க்க முடியும்? ஆதலால் கோடை மழை பெய்ய வேண்டும் என்றும், மாசி மழை பெய்ய வேண்டும், மரங்கள் தழைய வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள்.

மழை எப்படிப் பெய்ய வேண்டுமாம்? ஊசிபோல மின்னல் மின்ன வேண்டும். உதயக் காலத்திலே கதிரவனின் பொற் கிரணங்கள் மேகங்களை ஊடுருவிக்கொண்டு பாய்ந்து வருகின்ற வகையிலே மழை காலிறங்க வேண்டும். பாசி மின்னல், கொடி மின்னல் எல்லாம் தோன்ற மழை பொழிய வேண்டும். இந்த அழகிய வருணனைகள் ஒரு நாடோடிப் பாடலிலே வருகின்றன. பாட்டைப் பார்ப்போம்.

வானமழை ராசாவே வான மகா தேவா
வான மகா தேவா மழையாய்ப் பொழியவேனும்
சோனைமழை யில்லாமல் சோறுன்னு அழுகுருர்கள்
காசிராஜா பெத்த மக்கள் கஞ்சியின்னு அழுகுருர்கள்
காரைப் பழம் பறிச்சுக் கையிரண்டும் கொப்புளமாம்
சூரிப் பழம் பறிச்சுத் துன்ப மிக வாகுதய்யோ
வட்டிக் கடன் வாங்கி வயலை யடகு வைத்தோம்
வட்டி பெருகுதய்யோ வயல் சாவி யாகுதய்யோ