பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

வெள்ளி மலையிலே தீயெரிய
வெண்கலப் பாத்திரம் பொங்கிவர
சூட்டடுப்பிலே கத்தரிக்காய்
சுப்பையன் பெண்டாட்டி. ராமக்காள்
கொட்டுங்கோ முழக்குங்கோ
கோணைக் கொம்பை ஊதுங்கோ

பிஸ்ஸாலே பிஸ்
பிஸ்ஸாலே பிஸ்

பிஸ்ஸாம் பறத்தல் உடலுக்கு நல்ல பயிற்சியைக் கொடுக்கும் விளையாட்டு. தும்பி பறத்தலும் இதுபோன்றது தான்.

களைத்துப் போன சமயத்திலே குழந்தைகள் வட்டமாக உட்கார்ந்துகொண்டு பலவகையான பாட்டுக்களைப் பாடுவார்கள். நிலா வெளிச்சம் இருக்கும்போது அவர்களுக்கு உற்சாகம் அதிகம். பெரிய வீட்டு வாசலிலே கூடிவிடுவார்கள். வயது முதிர்ந்தவர்களெல்லோரும் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்திருக்க இவர்களுடைய ஆட்டமும் பாட்டமும் இரவிலே நெடுநேரம் நடைபெறும்.

குழந்தைகள் சேர்ந்து உட்கார்ந்து பாடும் பாடல்களில் ஒன்று.

காக்கையின் குஞ்சுக்குக் கலியாணம். அதைப்பற்றிக் குழந்தைகள் பாடுகிறார்கள்.

காக்காக் குஞ்சுக்குக் கலியாணமாம்
காசுக் கரைப்படி மஞ்சளாம்
துட்டுக் கொடுத்தால் பூசலாம்
துரையைக் கண்டால் டேக்காம்