பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டு

53

மானத்து மீனோ நீ
மேகத்து மின்கொடியோ
பாண்டவர்கள் செய்த
பதக்கத்துக் கல்லொளியோ
முன்னேர்கள் செய்தளித்த
மூக்குத்திக் கல்லொளியோ
மாது துரோபதைக்கு
வாய்த்த மருமகனே
கொத்தே மரிக்கொழுந்தே
கோமளமே நீயுறங்காய்
கண்ணான கண்ணுறங்கு
கான மயிலே உறங்கு

மாமனைப் புகழ்ந்து கூறும் தாலாட்டைப் பார்த்தோம். தந்தையைப் புகழ்ந்து பேசும் தாலாட்டில்லையா? நிச்சயமாக இருக்கிறது. எத்தனையோ பாடல்கள் உண்டு.

தாய் தனது குழந்தைக்கு அதன் தந்தையின் வீரச் செயலை எடுத்துக் கூறும் ஒரு தாலாட்டுப் பாடலை இப்பொழுது பார்ப்போம்.

கிராமத்திலே வாழ்கின்ற தாய் அவள். தன் கணவன் பகையாளியை விரட்டிய செய்தியை அவள் தாலாட்டுப் பாடலாகக் கூறுகிறாள்.

ஆராரோ ஆராரோ-கண்ணே நீ
ஆரிரரோ ஆராரோ
சட்டைமேலே சட்டை போட்டு-உங்களப்பன்
சருகைப்பட்டை மேலே போட்டு