பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூப் பொங்கல்

89


இந்தக் கேள்விக்குப் பெண்கள் பதில் சொல்லுவார்கள்.

பூப் பறிப்பதும் இன்னிக்குத்தான்
பெட்டியிலிடுவதும் இன்னிக்குத்தான்
அதிசயமான இந்த ஊரிலே
அள்ளி இறைப்பதும் இன்னிக்குத்தான்
(பூவோ...பூவு)

நெல்லுவிளையுது நீலகிரி
நெய்க்கும்பம் சாயுது அத்திக்கோடு
பாக்கு விளையுதாம் பாலக்காடு
பஞ்சம் தெளியுதாம் இந்தஊரில்
(பூவோ... பூவு)


பிறகு பலவகையான பழங்களைப் பறிக்கத் தொடங்கு வார்கள். அங்கேயும் பாட்டுத்தான்.

ஏரிக்கரையோரம் இலந்தை பழுத்திருக்கும்
ஏறி உலுக்குங்கப்பா-எனக்கிளைய தம்பிமாரே
பார்த்துப் பொருக்குங்கம்மா- ஒயிலன்னமே
பசுங்கிளியே தங்கைமாரே-ஒயிலன்னமே

ஆத்தங்கரையோரம் அத்தி பழுத்திருக்கும்
அடிச்சு உலுக்குங்கப்பா-அன்புள்ள தம்பிமாரே
அள்ளிப் பொருக்குங்கம்மா-ஒயிலன்னமே
அன்புள்ள தங்கைமாரே-ஒயிலன்னமே


குளத்தங்கரையோரம் கொய்யாப் பழுத்திருக்கும் குலுக்கி உலுக்குங்கப்பா-குணமுள்ள தம்பிமாரே குணிந்து பொருக்குங்கம்மா-ஒயிலன்னமே
குணம் நிறைந்த தங்கைமாரே-ஒயிலன்னமே