பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூப் பொங்கல்

91



போறாயோ போறாயோ போறாயோ புள்ளாரே?
வாராயோ வாராயோ வருவாயோ புள்ளாரே?
போறாயோ புள்ளாரே போறாயோ புள்ளாரே?
வாராயோ புள்ளாரே வருவாயோ புள்ளாரே?


சிந்தாமல் சிதராமல் வளர்த்தினேன் புள்ளாரே
சித்தாத்துத் தண்ணியிலே சிந்துகிறேன் புள்ளாரே(போ)

வாடாமல் வதங்காமல் வளர்த்தினேன் புள்ளாரே
வாய்க்காலுத் தண்ணியிலே விட்டேனே புள்ளாரே(போ)

பூவோடு போறாயோ போயிட்டு வாராயோ
பூவோடு வாராயோ பெண்களைப் பாராயோ (போ)


பிள்ளையாரை வழியனுப்பிவிட்டு மறுபடியும் கும்மி விளையாட்டு.


ஒரு செடியாய் ஒரு சிமிறாய்
ஒண்ணாயிரம் செண்பகப்பூவாய்
செண்பகப்பூவைப் பறித்தெடுத்துச்
சிலம்புச் சித்திரக் கோலமிட்டு
இடி இடித்து மழை பொழிய
இருகரையும் பெருகிவர
பெருகிவரும் தண்ணியிலே
பெண்களெல்லாம் நீராடி
நீராடி நீர் குளித்து
நீலவர்ணப் பட்டுடுத்தி