இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூப் பொங்கல்
93
மூணாம்படிகடந்து
மூணுவகைப் பூவெடுத்து
பூவெடுத்துப் பெட்டியிட்டுப்
போய் சேர்ந்தோம் கன்னிமலை
கன்னி கடந்தமலை
கைலாச வீரமலை
வீரமலைக் கோவிலிலே
விளையாடப் பெண்கள் வந்தோம்
இந்த சமயத்திலே கிருஷ்ணனுடைய லீலைகளை நினைத்துப் பாட்டும் கும்மியும் தொடங்கும்.
உரியிலே வெண்ணையிருக்கோ-கிருஷ்ணன்
உறிஞ்சிக் குடித்தாரு
சட்டியிலே வெண்ணையிருக்கோ-கிருஷ்ணன்
சாய்த்துக் குடித்தாரு
(உரியிலே)
பாக்குமரத்திலே-கிருஷ்ணன்
பந்து விளையாட
தேக்கு மரத்தடியே-கிருஷ்ணன்
தேன் மொழியாளைக் கண்டார்
(உரியிலே)
செண்பகச் செடியடியே-கிருஷ்ணன்
செண்டு விளையாட
செண்பகப் பூவாலே - கிருஷ்ணன்
செண்டு முடிந்தாரு
(உரியிலே)