பக்கம்:காலத்தின் குரல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஏன்?

வல்லிக்கண்ணனுக்கு அறுபது வயது நிறை வில், அவரைப் பாராட்ட நெல்லை முற்போக்கு எழுத்தாள நண்பர்களும் கலை இலக்கியப் பெருமன்ற நண்பர்களும் கூடினர். அவருடைய ஒரு நாவலைப் படித்து பேசச் சென்ற நான், அவரிடம் சில ஆதாரபூர்வமான கேள்விகளையும் கேட்டேன். சட்டென்று அவர்களும் பதில் தந்தார்கள்.

படைப்பாளி வரலாறு, பின் வருகிற சந்ததியினருக்கு கற்பனைப் படிவமாக திகழ்வதைத்