பக்கம்:காலத்தின் குரல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவசு: థౌ శ్రీ : 49. வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது எழுத்து ஆனுலும், எழுதுகிறவர்கள், தாங்கள் எழுதுகிறபடிதான் வாழ்ந் தாக வேண்டும் என்ற நியதி எதுவும் இல்லை. அப்படி வாழ்ந்துவிடவும் இயலாது. சொல்லும் செயலும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும் அப்படி வாழி வாழ்க்கையே அனுமதிப்பதில்லை. ஒரு உதாரணம்: பொய் சொல்லக்கூடாது; சத்தியமே கடைப்பிடிக்கப் பெற வேண்டும் என்பது உயர்ந்த நோக்கு ஆயினும், இதை அன்ருட வாழ்க்கையும் சமூக நிலையும் ஆதரிப் பதில்லை. ஒவ்வொரு நபரும் உணரக்கூடிய நடை முறை இது. யோக்கியமான எழுத்துக்களை எழுதுகிறவன் அயோக் கியத்தனமாக வாழ்க்கை வாழ்வதும், அயோக்கியத் தனமான எழுத்துக்களை எழுதிவிட்டு யோக்கிய வாழ்க்கை நடத்துகிறவனும் எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் இருந்திருக்கிருர்கள் - இருக்கிருர்கள்இருப்பார்கள். . கூடுமானவரை, சொல்வதுபோல் செய்வதும், எழுது வதுபோல் வாழ்வதும் விரும்பத் தக்கது; வரவேற்கத் தகுந்தது. பாராட்டப்பட வேண்டியதும்கூட. பாரதி வரை, தேர்ந்து எடுத்துப் படிக்கும் வாசகர் நவீன இலக்கியத்தில் சகட்டு மேனிக்கு எல்லாவற்றை யும் ரசிப்பது ஏன்? இக்காலத்தில், எல்லாம் வசீகரமான அமைப்புகளிலும் கவர்ச்சி அம்சங்களோடும் கிடைப்பது ஒரு காரணம். பலவும் ருசிகரமாகத் தோன்றுவது ஒரு காரணம்.