பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடோரசித்தன் கதை

27


வினவினர் நாரதர். அச்சமயம் உச்சியைச் சமீபித்த அந்தக் கல்லும் ‘கடகடகட’ என உருண்டு வீழ்ந்தது. நாரதர் கூறியதைக் கேட்டும் இந்தக்கல் கீழே விழுந்ததைக் கண்டும் சற்றும் மனஞ் சலியாது கடோரசித்தப் பேய் “போங்கானும், யோசனை யில்லாதவரே! உச்சியிற் சேரா விட்டால் என்ன கெட்டுப்போயிற்று. ஒன்றுங் கெட்டுப் போகவில்லை. ஒரு காலத்தில் உச்சியில் சேரும் இக்கல், என்னும் ஓயா உணர்ச்சியே ஓயா இன்பமாம்; இதை நீர் அறிந்திலீர் போலும்” எனக் கூறிக் கீழே விழுந்த கல்லை மேலே உருட்டிக்கொண்டே நகைத்தது.


முற்றிட்டு