பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவை நோன்பு 97


> ..--حمحسن محبصمیم.م.م. ----۔ مہ........ - ~" -------عم-۔ --مہ۔

மின்னல் தோன்றிச் சற்று நேரத்திற்குப் பிறகு கேட்கப் பெறும் இடிமுழக்கம், பிராட்டியின் திருவடியில் அணிந் துள்ள சிலம்பின் ஒலிபோல் உள்ளது. வானத்தில் காட்சியளிக்கும் வானவில் அம்மையின் திருப்புருவத்தை நினைவுக்குக்கொண்டு வருகின்றது. மேகத்தினின்று பொழியும் மழையோ அடியவர்களிடம் சுரக்கும் ஆண் டவன் அருள் போல் காட்சியளிக்கின்றது. சமயக் கோட்பாட்டிற்குத் தகுந்தாற்போல் இரண்டு பாட்டுக்களிலும் மாறுபட்ட ஐதிகங்கள் கூறப்பெற்றிருந் தாலும் இரண்டிலும் பொற்சரடுபோல் ஊடுருவி நிற்கும் மழையின் தன்மை, ஆண்டவன் பக்தர்கள்பால் காட்டும் அருள் தன்மை, ஒன்றுதானே ? இறுவாய் : ஆகவே, திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இரண்டு பிரபந்தங்களும் சமய வேறுபாடுகளால் சில ஐதிகங்களில் மாறுபட்டாலும் தேவி நோன்பு போன்ற வழிபாட்டிலும், வழிபாட்டின் குறிக்கோள் களிலும் ஒன்றுபட்டே இருக்கின்றன. இந்த இரண்டு இசைத் தமிழ்ச் செல்வங்களும் தமிழ் இலக்கியப் பூங் காவை அழகு செய்துநிற்கும் வாடாத கவிதைப் பூந் துணர்களாக மிளிர்கின்றன. இரண்டிலுமுள்ள பாடல் களில் நகைச்சுவையோடு ஒருவித நாடகத்தன்மையும் ஒசையின்பமும் ஏற்றதொரு முறையில் கலந்து இன்ப மணம் கமழ்கின்றது. அடிக்கடி மழையின்றி எம் மருங்கும் பஞ்சம் தலைவிரித்தாடும் இக்காலத்தில் பண்டைத் தமிழ்ப் பெண்மணிகளைப் போலவே இன்றைத் தமிழ்ப் பெண்மணிகளும் மார்கழியில் பாவை நோன்பு நோற்று மழைவரம் பெற வேண்டியது அவர்களுடைய தலையாய கடமையாகும். தமிழ்நாடு உய்வது பக்தியும் ஆன்ம ஆற்றலும் மிக்க பெண்களின் கையில்தான் உள்ளது. இல்லேயா ? 47–8