பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 G3 காலமும் கவிஞர்களும் SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASMSMSMSAS A SAS SSAS م .......-ى،۰سښ دv .مسی سو பங்குனிஉயர் அழுவத்துத் தலைநாள்மீன் நிலைதிரிய நிலநாள்மீன் அதனெதிர் ஏர்தரத் தொன்னுள் மீன் துறைபடியப் பாசிச் செல்லாது ஊசி முன்னது அளக்கரத்திணை விளக்காகக் களேயெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி ஒருமீன் விழுந்தன்ருல் விசும்பின்னே.” “ என்ற அப்பாட்டின் முதற்பகுதியையும் அதன் உரைப் பகுதியையும் ஆராய்வதால் பல வானநூற் கருத்துக்கள் புலனுகின்றன. ஆடு என்பது மேடராசி ; அழற்குட்டம் என்பது கார்த்திகை நாள். அக்கினியை அதிதேவதையாகவுடை மையின் கார்த்திகைக்கு அழல் என்பது பெயராயிற்று. அசுவதி, பரணி என்ற இரண்டு விண்மீன்களும் கார்த்தி கிையின் முதற்காலும் மேடராசிக்குரியன. பங்குனி மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் உள்ள தினம் பூர்வ ஷஷ்டி அல்லது சப்தமி என்பது கணிதநூல் துணிபு ; அத்தினத்தின் பாதி இரவு நிறைந்த இருள் சூழ்ந் திருக்கும். அனுடம் ஆறு மீன்களின் தொகுதி ; அது வளைந்த பனேபோல் இருக்கும். கடைக்குளத்துக் கயம் என்பது குளம்போன்ற வடிவுடைய புனர்பூசம். பங்குனி மாதத்தில் தலைநாள் மீன் உத்தரம் ; நிலைநாள் மீன் என்பது உத்தரத்தின் பின் எட்டாகிய மூலம் ; தொன் குள் மீன் என்பது உத்தரத்தின் முன் எட்டாகிய மிருக சீரிடம். உத்தரம் உச்சியிலிருந்து சாய, மூலம் எழ, மிருக சீரிடம் மறைய ஒருமீன் வடக்கும் கிழக்கும். போகாமல் இடைநடுவே தீப்பரக்க விழுந்தது. பங்குனி மாதத்தில் நட்சத்திரம் வீழின் இராசபீடை என்பர் சோதிடநூலார். ‘ஆடுகயல் தேள் தனுச்சிங்கத் தெழுமீன் விழுமேல் அரசழிவாம்’ என்பது சோதிடநூற் கூற்றகும்.