பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் பாஞ்சாலி சபதம் 莎莎 AMMM AMAMMMAAA AAAA SAAAAA AAAASAAAAMAMAMMMeeeiBeAAAA ASAS A SAS SSAS SSAAAA AAAA AAAA AAAA AAAA AASAAASAAA S போலாகும் என்று பேசுகின்ருன். அருகிலிருந்து கேட்துரியோதனனுடைய சினம் உச்சநிலைக்குச் செல்லு கின்றது. பலவிதமாகப் பேசியவன், '-என்னே க் 'கொல்லினும் வேறெது செய்யினும்,-நெஞ்சிற் கொண்ட கருத்தை விடுகிலேன் ;-அந்தப் புல்லியப் பாண்டவர் மேம்படக்-கண்டு போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன்: என்று நன் நெஞ்சுறுதியைக் காட்டுகின்ருன். தன் விருப்பத்தைத் தந்தை நிறைவேற்ருவிட்டால், தந்தை யின் முன்னர் தான் ஆவியை விட்டுவிடுவதாகக் கூறுகின்ருன். “ஐய, சூதிற் கவரை யழைத்தால் ஆடி உய்குதும் ; அஃதியற்ருயேல் நைய நின் முனர் என் சிரங் கொய்தே நானிங் காவி யிறுத்திடுவேனுல் :” என்ற தனயன் சொற்களைக் கேட்ட திருதராட்டிரன், 'விதி செயும் விளேவி னுக்கே-இங்கு வேறுசெய்வார் புவி மீதுளரோ ?” என்று விதியின் வலியை நினைந்து வழியுங் கண்ணி ரோடு சபையை நிறுவ விடைகொடுக்கின்ருன். தூது சொல்லும் விதுரனிடம், விருந்துபற்றிக் கூறும் பேச்சி னிடையில், சகுனி சொற் கேட்டே பேயெனும் பிள்ளை கருத்தினிற் கொண்ட தீச்செயல் இ.தென் றதையும் குறிப்பாற் செப்பிடு வாய்” என்று சொல்லும்படி கூறும் திருதராட்டிரனது நல்ல பண்புகளையும் அவன் தன் தம்பி மக்கள்மீது கொண்ட அன்பையும் பரிவையும் காண்கின்ருேம்.