பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

130 ஏற்படுத்தியிருக்கும் நாளையில் அக்காலத்தில் என் வமிசத் தானான காலிங்க கவுண்டன் என்கிறவன் பூந்துரை நாட்டுக்கு காணியாளனாய் மேல்கரை முப்பத்து ரெண்டு கிராமத்துக்குச் சேர்ந்த வெள்ளோடு குடியிருப்பு காரனுக்குத் தம்முடைய இஷ்ட தெய்வமான சர்வேஸ்வர பாடகவல்லி நாய்ச்சியார் தேவஸ்தானம் சீர்னோத்தாரணம் பண்ணிக் கொண்டு இருந்தான். அணை கட்டக் காரணம் பூந்துறை நாட்டுக்கு நாட்டானாய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்காரனாய் இருக்கும் நாளையில் கங்கை குலம் சாத்தந்த கோத்திரம் காலிங்கக் கவுண்டன் என்கிற தன்னுடைய குமாரனுக்குக் கலியாணம் பண்ண வேணுமென்று நினைச்சு மாமன் மச்சுனனான பண்ண குலத்தாளி வீட்டிலே பெண் கேட்டுக் கலியாணம் செய்யத் தக்கதாக யோசிச்சு பெண் சம்மதமாகி அந்த ராத்திரி சாப்பிடுகிறதுக்கு சமையல் பண்ணுகிறவன் வந்து இவர் களுக்குச் சமையல் பண்ணுகிறதுக்கு எந்த அரிசி போடுகிறது என்று கேட்க்க, அவாள் கம்பு விளைகிற சீர்மையிலே இருக்கிற பேர்களுக்கு எந்த அரிசி என்று தெரியவா போகிறது பழ அரிசி தானே போடு போவென்று சொல்ல அது சேதி ஷை காலிங்கக் கவுண்டன் கேட்டு அவாள் வீட்டிலே சாப்பிடாதபடிக்கு இருந்து நெல்லு விளையும் படியாக நீர்ப்பாங்கு உண்டு பண்ணிக்கொண்டு உங்கள் வீட்டுப் பெண் கொண்டு சாப்பிடுகிரோமென்று சபதம் கோரிக்கொண்டு வந்து தன் ஊரிலே வந்து சேர்ந்து மனதிலே தனக்குத் தோணியிருக்கும் நாளையில் இவர் இஷ்டமான சர்வேசுரரைத் தன்னுடைய அபீஷ்டம் சித்தியாக வேணுமென்று நினைச்சு இருக்கும் வேளையில் இராத்திரி சொப்பனத்திலே ஒரு விருத்த பிராமண ரூபமாய் வந்து இந்த சர்ப்பம் போகிற வழியாக வாய்க்கால் வெட்டி வைக்கச் சொல்லி காரணமாக சொப்பனமாச்சுது. அந்தச்