பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

131 சொப்பனமான உடனே கண் விழித்துப் பார்க்குமிடத்தில் ஒரு சர்ப்பம் பிரதிட்சமாக இருந்தது தான் கண்டு இருக்கப் பட்ட சொப்பனத்தைக் கண்டு அறிய வேண்டு மென்று நினைச்சு வீடுகட்கு வெளியிலே வந்த சமயத்தில் சர்ப்பம் இவனைக் கண்டு முன்னே நடந்தது அந்தச் சர்ப்பத்தைக் கண்டு தொடர்ந்து போய் இந்த வழியாகப் போகுதென்று அடையாளங்கள் போட்டுக் கொண்டு வருகிறபோது கொடுமுடி க்ஷேத்திரத்தில் சர்ப்பம் நின்றது. வாய்க்கால் அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாய்க்காலும் வெட்டி வைக்க வேணுமென்று நினைத்து பவானி ஆற்றிலே குறுக்க அணை கட்டி வைக்க வேணுமென்கிறதாக நினைத் திருந்த சமயத்திலே பவானிக் கூடல் ஸ்தானத்துக்கு மேல் புறத்தில் பவானி ஆத்துலே சர்ப்பம் குறுக்கே படுத்துக் கொண்டது. அந்த இடத்திலே அணை கட்டி வைக்க வேணுமென்று பவானி கூடலுக்கு வடக்கே வூராச்சிமலையும் தடமும் சுத்தக் கிரயத்துக்கு வாங்கி அணைகட்டுகிற சமயத் திலே வெள்ளை வேட்டுவர் என்கிற பாளையக்காரன் அணை கட்டுகிற எல்லை தன்னதென்று சண்டை பண்ணினமையாலே வெள்ளை வேட்டுவரை ஜெயிச்சு அணையும் கட்டி வெகு திரவியங்கள் செலவளிச்சு சர்ப்பம் போயிருந்த அடையாளங்களைப் பிடிச்சு வாய்க்கால் வெட்டி கொடுமுடி வரைக்கும் வாய்க்கால் வெட்டி வைச்சு பவானி அணை முதல் கொடுமுடி ஸ்தானத்துக்கு அத்து வரைக்கும் முக்காத வழி தூரத்துக்கு சர்ப்பம் போன போக்கிலே வாய்க்கால் வெட்டின ஏழுகாதவழி நடை கோணக் கோணலாக வாக்கியால் வெட்டி வச்சான். பெயர்க் காரணம் அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாக்கியால் வெட்டி வச்சு பவானி ஆற்றிலே சர்ப்பம் படுத்துயிருந்த யிடத்திலே