பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 280


4000 ஆயுதந் தாங்கிய போர் வீரர்களின் தோற்றக்காட்சி ஒரு அசா தாரண சூழ்நிலையாகும். (உம்.ந.ச.) ஆனால் கலெக்டரால் பெறப்பட்ட குறிப்புகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாகப் பெருக்கப்பட்டிருக்க வேண்டுமென்று நாங்கள் ஐயுறுகிறோம். (ஏன்? - ந.ச.) இராமநாதபுரம் வரை அமைந்த மொத்த வழியிலும் கலெக்டரையே பின்பற்றிச் சென்ற பாளையக்காரனை அவ்வளவு பெரிய படைவீரர் கூட்டம் தொடர்ந்து சென்றிருக்கும் என்பதும் அதோடன்றி அங்கு பாளையக்காரன் வருகை தந்ததற்கு மறுநாளே, இந்த ஆய்ந்து தீட்டிய திட்டத்தின்படி (உம்....- ந.ச.) தயாராக இருந்து செயலாற்ற அவர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களை மறைத்துக் கொண்டிருக்க ஏற்பாடு செய்திருப்பார்கள் என்பதும் உண்மையாக நிகழக் கூடியதல்ல (உ.ம்...... அப்புறம்! - நச) ஆனால் இந்தச் சூழ்நிலைகளில் நாங்கள் இன்னும் அதிகமான குறிப்பான விளக்கங்களைக் கேட்க வேண்டுமென்ற எங்கள் எண்ணத்தைத் தெரிவித்தோம். பாளையக்காரன் தப்பித்தபோது அவர்கள் தோன்றினார்கள் என்றால் அவர்கள் அங்குள்ள சுவர்களிலேதான் ஒளிந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு பெரிய வீரர்களடங்கிய படை யாராலும் கவனிக்கப்படாமல் கோட்டைக்கு அவ்வளவு அருகே எப்படி அணுக இயலும் என்பதைப் பற்றி ஆணை - அலுவலரை விளக்கும்படி கேட்க வேண்டிய தகுதியைப் பற்றி ஆலோசனை கூறினோம். (அது சரி! ........ -ந.ச.)

204. இந்தப் பாளையக்காரனது நடத்தைக்குத் தூண்டு கோலாயிருந்தது, எதுவாயிருப்பினும் அவன் செய்த குற்றத்தின் (?-ந.ச.) கொடுமை சிறப்பான தண்டனைக்குரியதாகவே தோன்றுகிறது. அவனுக்கு எதிராகச் செயல்பட அமைத்த படை, அவனைப் பிடிக்க கலெக்டர் 5000 ரூபாய் பரிசு கொடுப்பதாக உள்ள திட்டம் இவற்றைத் தங்களது மேலான பார்வைக்கு விட்டுவிடுகின்றோம். இந்த நேரத்தில் மிகக் கடுமையான சான்று ஒன்றைக் காட்டவேண்டிய தேவையை நாங்கள் உணர்கிறோம். மேலும் நாங்கள், பாளையங்கள் (பொள்ளங்கள்) நிலையாகப் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும், நீதி இயக்குநர் குழு (Court of Directors) ஏற்றுக் கொண்ட கொள்கைப்படி, பாளையக்காரர் குடும்ப நன்மைகளை எண்ணி ஆளும் இனத்திற்கு எதிராகக் குற்றங்கள், கொள்ளைகள் செய்வதினின்றும் அவர்களைத் தடுப்பதற்கும் பரிந்துரை செய்கின்றோம்.

205. காலஞ்சென்ற லெப்டினன்ட் கிளார்க்கியின் குடும்பத்தைப் பற்றி கலெக்டரால் சொல்லப்பட்ட சூழ்நிலையில் அக்குடும்பத்திற்காகத் தாங்கள் விரும்பிக் குறிப்பிடும் ஓய்வு ஊதியம் எதுவாயிருந்தாலும் அதைப் பாஞ்சாலங்குறிச்சிப் பாளைய வரிவசூலிலிருந்தே செலுத்தப்