பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 382


கிறித்துவ அடிப்படைத்தத்துவங்களைத் திரும்பத் திரும்பப் பாடும்படிச் செய்வேன், ஒவ்வொரு கிராமத்திலும் தகுதி பெற்ற ஒருவரைத் தலைமை ஏற்கச் செய்வேன். அவர்களுடைய ஊதியத்திற்காக என் வேண்டுகோளின் பேரில் வைசிராய் 4000 பொன் பனாமாக்களை (3½ பொன் பனாமாக்கள் ஒரு ரூபாய்க்குச் சமம்) ஒதுக்கிவைத்துள்ளார். பரவ கிறித்தவர்களுடைய அறியாமையை விட அவர்களுக்கு அக்காலத்தில் இருந்த ஒழுக்கக் குறைவு சேவியர் போன்றவர்க்கு ஒரு பெரிய சோதனையாகவே இருந்திருக்க வேண்டும். அவர் அங்கு தொண்டாற்றத் தொடங்கிய இரண்டு ஆண்டுகட்குப் பின்பு அவரது உதவியாளராகிய புன்னைக்காயலிலிருந்த பிரான்ஸிசு, மான்ஷியன்சுக்கு 1544-ல் எழுதிய கடிதத்தின் கீழ்க்காணும் பகுதிகளே அதற்குப் போதிய சான்றாகும்.

அறிவும் அதிகாரமும் நமக்கு உணர்த்துவது போல மற்ற செய்திகளைத் தொடங்கு முன்னர் போர்ச்சுகீசிய ஆதிக்கத்திற்குட்பட்ட மக்களாகிய இவர்களுக்குள் உள்ள கலகக்காரர்களின் முரண்படும் பிடிவாதப் பண்பை ஒழிக்க அடக்குமுறையைப் பயன்படுத்த வேண்டியது அடிக்கடி தேவையாகும். வைசிராயிடமிருந்து பெற்ற ஒரு அதிகாரியை நான் உன்னிடம் அனுப்புகிறேன். பொதுச் சட்டங்களை மீறிக் 'கள்' என்று அவர்கள் அழைக்கும் மயக்கம்தரும் மதுவை அருந்தி மயக்கத்தில் மூழ்கியிருக்கும் எந்தப் பெண்ணும் 'பணம்' என்று அவர்கள் சொல்லும் தொகையான இரண்டு வெள்ளி பென்சுகள் தண்டம் செலுத்த வேண்டும். தவிர அத்தகைய குற்றம் செய்து மயக்கத்திலிருப்பவர்களுக்கு மூன்று நாட்கள் சிறைத்தண்டனை அளிக்கும் படியும் அவனுக்குக் கட்டளை யிட்டேன். எல்லாக் கிராமங்களிலும் இந்தச் சட்டத்தை நீ விரைவாக நடைமுறையில் கொண்டு வரச் செய்தல் வேண்டும். குடித்த எல்லாப் பெண்களுக்கும் தண்டனை விதிக்கும்போது சட்டம் தெரியாதென மன்னிப்புக் கோராதவாறு எல்லாக் கூட்டங்களிலும் இதை விளம் பரப்படுத்துதல் வேண்டும்.

எப்போது உன்னிடம் நான் வரமுடியும் என்று சொல்ல இயலாது. ஆனால் அதுவரை பதங்காட் (பட்டங்காட்டி, பரவர்கள் மற்றும் சில சாதித் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பட்டப்பெயர்)களுடன் சேர்ந்து அவர் களுடைய கெட்ட பழக்க வழக்கங்களைத் திருத்த வேண்டும். அவர்கள் பழைய தீமைகளில் மூழ்கியிருப்பதை நான் பார்த்தேனானால் வைசிராயிடமிருந்து நான் பெற்றுள்ள அதிகாரத்தின் உதவியால் அவர் களைக் கைது செய்து சங்கிலிப் பிணைப்புகளுடன் கொச்சிக்கு அனுப்பு வேன் என்று அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் எளிதான