பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79 கால்டுவெல்


பலமுடையவர்களாய் ஆட்சி புரிந்தார்கள். இவர்கள் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் தங்களுக்குரிய அதிகாரத்தைச் செலுத்தி வந்தார்கள். 16 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வேறு எந்த அரசாட்சியும் தென்னிந்தியாவில் உன்னதநிலை அடைந்திருந்ததாகச் சொல்ல இயலாது. பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை ஆர்க்காட்டு நவாபு தென்னிந்தியாவின் ஆட்சியில் பங்கெடுத்துக் கொள்ளும்வரை வேறு எவரும் புகழடையவில்லை.