பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—தமிழ்

23

தமிழ்:

தமிழை ’அரவ’ மென்பதேன்? தக்காணத்திலுள்ள முகம்மதியர்களும், தெலுங்கர்களும், கன்னடர்களும் தமிழ் மொழியை ’அரவம்’ என்றே அழைப்பர். அஃதேன்?.

’டாக்டர் குண்டெர்ட் என்பவர் அரவம் என்ற சொல்லை அறவம் என்று கொண்டனர்: கொண்டு, தமிழலக்கியமே ஏனைய மொழி இலக்கியங்களைக் காட்டினும் அற நூல்களும் அறத்துறைகளும் நிறைந்ததாகக் காணப்படுகின்றதாதலின், அறம் மலிந்த அம் மொழி அறவம் என்று அழைக்கப்பட்டது போலும்’ என்று வகுத்துரைத்தார். இதன்படி அறவர் என்ற சொல் அறம் மலிந்த கொள்கையினரையே குறிக்கும். புத்தர் பெருமானுக்கு அறவன் என்ற பெயரொன்றுங் காணப்படுதல் ஈண்டுக் குறிப்பிடற்பாலது. அதனால் அரவம் என்பது புத்தர்களையே குறிப்பதாகாதோ என்று ஐயம் நிகழ்தல் கூடும். இடையின ரகாங் கொண்டியலும் அரவம் என்ற சொல்லை வல்லின றகர முடையதாகக் கொண்டு இப்பொருள் கூறுதல் ஆகுமோ என்று கேட்கலாம். தமிழ் வல்லின றகரம் தெலுங்கிலும் கன்னடத்திலும் இடையின ரகர மாகக் திரிதல் இயல்பு. ஆதலின் அக் கேள்விக்கு விடை எளிது. தமிழ் அறம் என்ற சொல் கன்னடத்தில் அரவு என்றாதல் காண்க.

இனி, அரவம் என்ற சொல் அறிவு என்ற சொல்லடியாகப் பிறந்த தென்று கொள்வர் ஒருசாரார். தென்னாட்டிலுள்ள மக்க ளினத்தாருள் தமிழ்மக்களே அறிவிற் சிறந்தவர்களாகப் பண்டுதொட்டு யாவரானுங் கொள்ளப் பட்டு வந்துள்ளமையின் இக் கருத்துத் தோன்றியது போலும்!

இனி, செந்தமிழ் சேர் எதமில் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளுள் அருவா என்பதும் ஒன்று. அருவா என்ற அச்