பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 127 நாராயணன் கம்பர் பெருமான், செய்யுளின் சந்தத்தை நோக்கி 'நாராயணன்' என்ற சொல்லை, ‘நராயணன்' என்றனர். அவர் செயலை ஏளனஞ் செய்யும் கவிஞர் இப்படிப் பாடுகிறார். நாராயணனை நராயணனென் றேகம்பன் ஒராமற் சொன்ன வுறுதியால் - நேராக வாரென்றால் வர்ரென்பென் வாளென்றால் வள்ளென்பேன் காரென்றாற் கர்ரென்பேன் யான். (204) "கம்பன் சற்றும் ஆராயாமல், 'நாராயணன்' என்ற சொல்லை, நராயணன்' என்று சொன்ன அதே நெஞ்சின் உறுதியினாலே, அதற்கு ஒப்பாக, யானும் இனிமேல் 'வார்’ என்றால் "வர் என்பேன், வாள்' என்றால் வள்’ என்பேன், ‘கார்’ என்றால் ‘கர்’ என்பேன்." நாராயணன் என்பது, திருமாலின் திருநாமம்; இதற்கு, ஜலத்திலே இருப்பவன் என்பது பொருள். நராயணன் என்றால், மனிதரில் இருப்பவன் என்பது பொருளாகிறது.இப்படிப்பொருள் முற்றவும் வேறுபடுகிறதனால் கவிஞர் கம்பரின் போக்கினைக் கண்டித்து உரைக்கின்றனர். பாம்பு கொண்டதோ? தென்றல் வருகின்ற காலத்தே, ஒரு சமயம் தென்றற் காற்றையே காணவில்லை. திருச்செங்காட்டிலிருந்த கவிஞர், அப்போது இவ்வாறு பாடினார். அம்பேந்து கையா னவன்பதியி லைம்மாவைக் கொம்பேந்தி தந்தைபணி கொண்டதோ-அன்பா வரிந்த மகவை யமுதுக் கழையென் றிருந்தவன்றன் செங்காட்டி லே. (205) “சிறுத்தொண்டன் சிவனடியார்க்கு அமுதிடுகின்ற பேரன்பிலே அரிந்த சிறுபிள்ளையை, 'உடனிருந்து அமுது உண்பதற்கு அழைப்பாயாக’ என்று சொல்லி வீற்றிருந்தவன் சிவபிரான். அவன் கோயில் கொண்டிருக்கின்ற திருச்செங் காட்டிலே, கமண்டலத்தை ஏந்தியிருக்கும் கையினனான அகத்தி யனின் பொதியமலையினின்று வருகின்ற தென்றற் காற்றினை, கொம்புகளைச் சுமந்திருக்கும் விநாயகப் பிரானின் தகப்பனுடைய ஆபரணமான பாம்புகள் தாம் இப்போது உண்டுவிட்டனவோ? அம்பு - கமண்டலமும் எழுகடலும் ஆம். கொம்பு ஏந்தி - ஒற்றைக் கொம்பினைக் கையிலே ஏந்தியிருப்பவனும் ஆகும். பணி - ஆபரணம்; பாம்பு, 'பாம்பு காற்றைக் குடித்ததோ?’ என்று வினவும் நயத்தினை அறிக.