பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 29 தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும் வண்டே விளக்கு மாறே. (40) செருப்புக்குச் சென்று வீரர்களை உழைக்கும் வேலன் - போர்க்களத்திடையே புகுந்துசென்று எதிர்த்த பகைவீரர்களைச் சிதறடிக்கின்றவனாகிய வேலனை, பொருப்புக்கு நாயகனை குறிஞ்சி நிலத்துக்கு உரிய தலைவனை, புல்லயான் தழுவும் பொருட்டாக, தண் தேன் பொழிந்த திருத்தாமரைமேல் வீற்றிருக்கும் வண்டே - குளிர்ந்த தேனைப் பொழிந்த அழகிய தாமரை மலரின்மேலே தங்கியிருக்கின்ற வண்டே விளக்கும் ஆறே - உரியதோர் வழியினை எனக்கு விளக்கிக் கூறுவாயாக! ஆறு என்பதற்கு அவனை அடையும் வழி எனவும் அவனிடத்தே செல்லும்வழி எனவும் பொருள் உரைக்கலாம். செங்கழுநீர்க் கிழங்கு செங்கழுநீர் என்பது நீர்ப்பூ வகைகளுள் ஒன்று. கச்சிக் காவலன் என்றொருவன் அந்தச் சபையிலே வந்திருந்தான். "செங்கழுநீர்க்கிழங்கு என்று அமைத்துப்பாடுக” என்றான் அவன். அப்போது காளமேகம் பாடிய செய்யுள் இது. வாதமணர் ஏறியதும் மாயன் துயின்றதுவும் ஆதிதடுத் தாட்கொண்ட அவ்வுருவும்-சீதரனார் தாள்கொண் டளந்ததுவும் தண்கச்சிக் காவலா கேள்செங் கழுநீர்க் கிழங்கு. (41) தண் கச்சிக் காவலா கேள் - குளிர்ச்சி பொருந்திய கச்சி நகரத்துக் காவலனே! நீ குறித்தபடியே சொல்வேன் கேட்பாயாக: வாது அமணர் ஏறியதும் - திருஞான சம்பந்தப் பெருமா னோடு வாதிட்டுத் தோற்ற அமணர்கள் ஏறியிருந்ததுவும், மாயன் துயின்றதுவும் மாயனான திருமால் பள்ளிகொண்டிருப்பதும், ஆதி தடுத்து ஆட்கொண்ட அவ்வுருவும் முதல்வனான சிவபெருமான் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட அந்தத் திருவுருவும், சீதரனார் தாள்கொண்டு அளந்ததுவும் - திருமாலானவர் தன் திருவடியினைக் கொண்டு அந்நாளிலே அளந்து கொண்டதுவும், செங்கழுநீர் கிழங்கு-செங்கழுவும், நீரும், கிழவுருவும், பூமியும் ஆகும். 'செங்கழு’ என்றது பழுக்கக் காய்ச்சிய கழுமரம் என்பதனால், அல்லது, செங்குருதி வழியச் சிவப்படைந்து தோன்றிய கழுமரமும் ஆம், 'நீர்' என்றது பரந்தாமன் துயில் கொண்ட பாற்கடலினை. சீதரன் எனத் திருமாலைக் குறித்தது, அவன் திருமகளைத் தன் மார்பிலே தரித்திருப்பவன் ஆதலினால்,