பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் பக்கத்திற்கொண்டு - தன் ஒரு பாகத்திலே பூங்கொடியான உமையினைக் கொண்டிருப்பதனாலும், மாசுணத்தைப் பூண்டு - சிறந்த பாம்பாபரணத்தைக் கொண்டிருப்பதனாலும், வளைத் தழும்பு பெற்றதனால் - தன் திருமேனியிடத்தே தழுவுங்காலத்தே அம்மையின் வளையல்கள் அழுத்திய தழும்புகளை உடையவரா யிருப்பதனாலும் என்க. விநாயகர் முருகர் பரமசிவன் சென்னிமுக மாறுளதாற் சேர்கரமுன் னாலுகையால் இந்நிலத்திற் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக் கண்ணுறுத லானுங் கணபதியுஞ் செவ்வேளும் எண்ணரனு நேரா வரே. (69) விநாயகர்க்கு: சென்னி முகம் மாறுளதால் - தலையும் முகமும் உடலமைப்பற்கு மாறுபட்டிருத்தலாலும், சேர்கரம் முன் நாலுகையால் - பொருந்திய துதிக்கையானது முன்புறமாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றதனாலும், இந்நிலத்திற் கோடு ஒன்று உருக்கையால் - இவ்வுலகத்தில் ஒற்றைக் கொம்பு அமைந்தவரா யிருத்தவராயிருந்தலினாலும், மன்னு குளக்கண் உறுதலால் - நிலைபெற்ற நிவேதனமாக வெல்லம் அமைத்து இருப்பதனாலும், முருகர்க்கு: சென்னி முகம் ஆறு உளதால் முடியும் முகமும் ஆறு உளதாதலினாலும், சேர்கரம் முந்நாலு கையால் பொருந்திய கரங்களும் பன்னிரண்டாக இருத்தலினாலும், இந் நிலத்தில் கோடு ஒன்று இருக்கையால் - இவ்வுலகில் குன்றமே பொருந்தியிருக்கும் இருப்பிடமாக இருந்தலாலும், மன்னு குளக்கண் உறுதலால் நிலைபெற்ற சரவணப் பொய்கையிலே அவதரித்ததனாலும், பரமசிவனுக்கு: சென்னிமுகம் ஆறு உளதால் - சிரசினிடத்தே கங்கையாறு உளதாயிருத்தலினாலும், முன்சேர் கரம் நாலுகையால் முன்புறத்தே தேர்ந்த ஒளியுள்ள கைகள் நான்கினை உடைத்தாயிருத்தலினாலும், இந்நிலத்தில் கோடு ஒன்று இருக்கையால் இவ்வுலகில் ஒரு மலை முடியான கைலாச பர்வதம் எனும் ஒன்று இருப்பிடமாயிருத்தலினாலும், மன்னுகுளக் கண் உறுதலால் - நிலை பெற்ற நெற்றிக்கண்ணினை உடைத்தா யிருத்தலினாலும், இம் மூவரும் சமம் என்க. இந்தச் செய்யுட்களை மனப்பாடம் செய்தல் பயன் தரும், சொல்வளமும், சொற்களைப் பல பொருள்பட அமைத்துப்பாடும் புலமையும் பெருகும். தமிழன்பர்களுக்கு நல்ல இலக்கிய வாதங்களில் இவ்வாறு பொருள் கொள்ளும் நுட்பமான அறிவு நலமும் உண்டாகும்.