பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 69 தம் கைக்கு மேலே நெருப்பை இட்டார் - எட்டுத் திசைகளிலும் மிகுதியாகப் புகழ்பெற்ற தம்முடைய கையின் மேலே அக்கினியை வைத்துக்கொண்டிருப்பவர்; அக்காளை ஏறினாராம் - புகழ் பெற்ற அந்த நந்தியெனும் காளை மாட்டின் மீதும் ஏறி வருபவர்; கண்டீரோ பெண்காள் - பெண்களே! அவரை நீங்களும் பார்த்தீர்களோ? பெண்களைச் சுமந்த அந்தக் காமப்பித்தன்; தங்கையையும் அக்காளையும் கெடுத்தானே! என்று நிந்தித்தது போல் வரும் வாசகத்து மெய்ப்பொருளை அறிந்து உண்மை காண்க சிற்றிடைச்சி காண்! சிதம்பரத்திலே திருக்கோயில்கொண்டு வீற்றிருக்கும் அம்மையின் பெயர் சிவகாமி. அம்மையைப் போற்ற நினைக்கிறார் காளமேகம். அவள் குடும்பம் இடையர் குடும்பம் என்கிறார். அவள் ஒரு சிற்றிடைச்சி, மாட்டுக்காரக் கோனாருடைய தங்கை; ஆட்டுக்கோனானுக்குப் பெண்டானாள்,குட்டி மறிக்க ஒரு கோட்டானையும் பெற்றாள்; இப்படிச் சொல்வது போலத் தோன்றுவது பாடல். மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர் ஆட்டுக்கோ னுக்குப்பெண் டாயினாள் - கேட்டிலையோ குட்டி மறிக்கவொரு கோட்டானையும் பெற்றாள் கட்டிமணிச் சிற்றிடைச்சி காண். (104) கேட்டிலையோ! - பெண்ணே! நீ இதனையும் கேட்ட தில்லையோ? மாட்டுக்கோன் தங்கை - மாடுகளைக் காப்போனாக விளங்கிய கோபாலனின் தங்கையான இந்தப் பார்வதிதேவி, மதுரைவிட்டு - தான் பிறந்த மதுராபுரியை விட்டு வந்து, தில்லை நகர் ஆட்டுக்கோனுக்குப் பெண்டு ஆயினாள் - தில்லைப் பதியாகிய இச் சிதம்பரத்தே நடனமாடுகின்ற ஆட்டுக் கோனுக்கு (கூத்தப் பெருமானுக்கு) மனைவியானாள் கட்டி மணிச் சிற்றிடைச்சி - மேகலை கட்டிய அழகிய இடைச்சியடி அவள்; (சிறிதான இடையினை உடையவள் அவள்) குட்டி மறிக்க ஆட்டுக் குட்டிகளை மறிப்பதற்காக (நம் தலையிலே குட்டிக்கொண்டு வணங்குமாறு) ஒரு கோட்டு ஆனையையும் பெற்றாள் - கோட்டானைப் போன்ற ஒருபிள்ளையையும் (ஒற்றைக் கொம்பனான ஆனைமுகனையும்) பெற்றாளடீ! சிற்றிடைச்சி - கன்னிப் பருவத்து இடைப் பெண் எனவும், குட்டி மறித்தல் ஆட்டுக் குட்டிகளை மறித்தல் எனவும், ஆட்டுக் கோன் ஆட்டிடையன் எனவும் பொருள் படுதலை அறிக; அவற்றின் உண்மையான பொருளையும் அறிந்து இன்புறுக. இது நிந்தாஸ்துதி.