பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.12 காளிங்கராயன் கொடை 'அம்மா, எனக்கு என்னத்துக்கு இப்போ ஆப்பம் சுட்டுப் போட்டாய்?" என்று சொங்கப்பன் குழந்தையைப் போலக் கேட்டான். "என் கையாலே உனக்கு ஒருநாள் கூட சாப்பாடு போடாது போனுல் எனக்கு மோட்சங் கிடைக்குமா? தோனே எனக்கு மோட்சங் கொடுக்க வந்திருக்கிருய்?" என்று அவள் பூரிப்போடு கூறினுள். அவள் முகத்திலே என்று மில்லாத ஆனந்தம் தாண்டவமாடியது. சொங்கப்பன் அவள் முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தான். ராமாத்தாள் அப்படியே உறங்கிவிட்டாள். நிறைவும் அமைதியும் அவள் முகத்தில் தோன்றின. அவள் மறுபடியும் எழுந்திருக்கவே இல்லை. சொங் கப்டன் அன்றுதான் துக்கம் என்பதை கன்ருக உணர்ந்து கொண்டான். சங்கம் புதரிலே கிடக்கும் தந்தை தாயற்ற பூனேக்குட்டியைப்போல அம்மா, அம்மா என்று அலறின்ை. ராமாத்தாள் விரும்பியவாறு சொங்கப்பன் அந்த வீட்டிலேயே ரொம்ப நாள் வசிக்கவில்லை. அவள் இறந்த ஒரு வாரம் வரையிலும்தான் அவன் அங்கிருந்தான். அதற் குள் ராமாத்தாள் அவனுக்கு கிறையப் பணம் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிருள் என்கிற விஷயம் ஊரெல் லாம் எப்படியோ பரவிவிட்டது. அந்த விஷயம் வெளியானதற்குச் சொங்கப்பனே தான் காரணம். அவன் தனக்கு ஆறுதல் கூற வந்தவர் களில் ஒன்றிரண்டு பேரிடம் அந்தப் பணத்தைக் கொண்டு ராமாத்தாளுக்கு மோட்சம் கிடைப்பதற்கு என்ன செய்ய லாம் என்று கேட்டுக்கொண்டிருந்தான். அ திலிருந்து விஷ் யம் வெளியாகிவிட்டது. - அவனிடம் இப்பொழுது பணம் நிறைய இருப்பதாக எங்கும் பேச்சு. சில பேர் உண்மையாகவே பெண் கொடுக்