பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 தங்கச் சங்கிலி "அது உண்மைலேயே மந்திர சக்தி வாய்ந்தது தான். கார்மோகினி என்ற அந்தத் தைலத்தின் வேலைதான் இது. அதைத் தயாரித்தவ்ர்கள் உண்மையிலே மகா கெட்டிக்காரர்களாக தி: வேண்டும். அதை இந்த ஒரு மாதமாகத் தடல் வருகிறேன். அதன் மகிமைய்ால் வழுக்கையெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டது.” - "அப்படியா? அந்தத் தைலம் எங்கே கிடைக் கும்? விலாசம் கொஞ்சம் சொல்லு” என்று வழுச் கைத் தலையர் ஆவலோடு கேட்டார். மற்றவர் விலாசம் கூறினர். டிராமிலே இருந்த எத்தனையோ வழுக்கைத்தலேயர்கள் அந்த விலாசத்தைக் குறித்துச் கொள்ளலாஞர்கள். இந்த மாதிரி சம்பாஷணை அந்த நாளன்று 1 மணிக்கு ஒவ்வொரு டிராமிலும் பஸ்ஸிலும் நடந்தது. ஒருத்தர் நல்ல அடர்த்தியான மயிருள்ளல் ராகவும் மற்ருெருவர். வழுக்கையராகவும் இரு தார்கள். அப்படி ஆசாமிகளைப் பொறுக்கி ஜோடிகள் செய்து வைத்திருந்தான் சந்திரன். இதுதான் அவன் செய்த முதல் விளம்பர தந்திரம். இந்த விளம்பரத்தின் பயன் அபாரமாக இரு தது. புதிய கூந்தல் தைலம் தினமும் ஆயிரம் பத்து யிரம் கணக்கில் விற்பனையாகத் தொடங்கியது முதலாளிக்கு அளவு கடந்த திருப்தி. அதுமுதல் சந்திரன் இப்படியே புதிய வியாபார தந்திரங்கள் கூறி அவருக்கு ஏராளமாக லாபம் வரச் செய்தான் சந்திரன் தன் ஆசைகளையெல்லாம் ஒரே மாதத் தில் பூர்த்தி செய்துவிட்டான். பழைய ஏக்கர் ளெல்லாம் அடியோடு மறைந்துவிட்டன. கமல் விற்கும் புதிய புதிய பட்டுச் சேலேகளும் நகைகளு