பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாருங்கல் 5? குச் சேவை செய்வது அனைவருக்கும் கடமையல்லவா?” என்றது. தென்றல். அதே சமயத்தில் மலர் ஒன்று, தென்றலே, எனது நறுமணத்தையும் சுமந்துகொண்டு போய் அவர்களுக்கு இன்பங் கொடு” என்று வேண்டிக்கொண்டது. மேகம் ஒன்று வானத்தின் ஒரு கோடியிலிருந்து கூவிற்று: தென்றலே, என்ன உயரத்தில் ஏந்திக்கொண்டு போய் அவர்களுக்கு மேலே நிறுத்து. கான் அவர்களுக் குக் குடையாக இருந்து சேவை செய்ய ஆசைப்படுகிறேன்.” 'தென்றலே, எனது இன்னிசைப் பாடலைச் சுமந்து கொண்டுபோய் அந்தக் காதலர்களின் செவியிலே தேன் பாய்ச்ச மாட்டாயா?" என்று குயிலொன்று பரிவோடு கேட்டது. - - பாருங்கல்லின் பொடிக்கு இப்பொழுது எப்படியோ மனம் திடீரென்று மாறிப் போயிற்று. பொடியாகி நுண்மை எய்தியதன் விளைவா, அல்லது அது கேட்ட வார்த்தைகளின் மந்திர சக்தியா, ஒன்றுமே புரியவில்லை. "தென்றலே, என்ன மெதுவாகக் கொண்டு போய அந்தக் காதலர்கள் கடக்கும் பாதையிலே பட்டுப்போலத் ஆாவிவிடு. அவர்களுடைய பாதம் கோவாமல் மெத்தென் திருக்க நான் ஆசைப்படுகிறேன்” என்று கனிவோடு வேண்டிக்கொண்டது பாருங்கல். -