பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 காளிங்கராயன் கொடை எழுதத் தைரியம் வந்தது. தங்களுக்கு இருக்கும் கருணையும் உபகாரச் சிங்தையும் மிகப் பெரிதென்று கண்டுகொண் டேன். . - - எனக்கு அங்கு வந்து தாங்கள் அளித்த் தேங்காயு லாடு பிரசாதம் வாங்கிக் கொண்டது முதல் அதன் மேலேயே ஞாபகமாய் இருக்கிறது. . - அந்த மாதிரி பாகமும், ருசியும் நான் எங்கும் கண்டதே இல்லை. அதைத் தாங்களே கைப்படத் தயார் செய்வதாக் கான் அன்று கேள்விப்பட்டேன். ஆதலால் தயவுசெய்தி அதை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதையும், என்ன என்ன பொருள்கள் என்ன அளவில் சேர்க்கிறீர்கள் என்பதை யும் விவரமாக எழுதியனுப்புமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். பதில் எழுத இத்துட விலாசமிட்ட கவரும் அனுப்பி யிருக்கிறேன். இதில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்குமாறு வேண்டு கிறேன். தங்கள் உண்மையுள்ள, அடியேன் ராமசாமி.”