பக்கம்:காவியப்பரிசு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாத்தொல்லை புணர்ந்து இடைவெளியைத் தானறிந்து தட்டழிந்து தடுமாறித் தவித்திட்ட அந்நாளில், கட்டிக் கரும்பென்றும் கண்ணென்றும் பொன்னென்றும் , மட்டிப் பழமென்றும் மலரென்றும் தேனென்றும், வெட்டிச் சிறுபேச்சும் வெறும் பேச்சும் வீண்பேச்சும் பேசத் துடிதுடித்தோம்; பேசினோம்; பேசி தின்ருேம்!' உள்ளத் துணர்வுகளை உனகர்வின் அசைவுகளை விள்ளும் வலிமையிலா வீணான வார்த்தைகளைப் - - பின்ளைப் பசுங்கிளிபோல் பேசினோம்; பேசி நின்றோம்! அத்தினத்தில் நாம்புகன்ற. அர்த்தமிலாச் சொற்சிலம்ப வித்தைகளும்,, அணிந்துரையாய் விளம்பியபல் புனைந்துரையும் இத்தினமும் நமக்கெதற்கு? இனிமேலும் அவையெதற்கு? அல்லாடும் நம்மிதயத் தந்தரங்கம் அறியாமல் சொல்லாடி நாம் சலித்துத் தோற்றாலும், உன்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/126&oldid=989761" இலிருந்து மீள்விக்கப்பட்டது