பக்கம்:காவியப்பரிசு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராசனெங்கள் வரகுணனை மீட்டும் எங்கள் நாயகனாய் ஆக்குவையேல் அதுவே போதும். வேங்கையன் : தேசபக்தி மிகுந்தொளிரும் கவிஞ! நின்றன் திருவுள்ளப் பட்டிருந்த வரமே தந்தேன். வீசு புகழ்ப் பெருவீர மகனே! மீட்டும் வேண்டுகின்ற வரமுண்டேல் சாற்று! சாற்று? கவிவாணன் : சாற்று கின்ற வரம்தன்னைத் தருவா: யென்ரு . சத்தியமாய்ச் சொல்லுவையோ? வேங்கையன் : ஐயப் பாடோ ? .. ஏற்றிருக்கும் செங்கோல்மீதாணை. இன்னே எவ்வரமும் கேட்டிடுவாய்! இனிதே ஈவேன். . காயீவானான் :) போற்றுகின்றேன் மன்னவனே உறுதி தந்தாய். புயல்கின்றேன். என் விருப்பை! அன்றோர் நாளில் காற்றலைக்கும் மலர்க்கூந்தல் ஆட, மையுண் கண்களிலே காதலெனும் அமுதம் பாய, - ஆற்றொழுக்குப் போலசந்தச, ஆடிப் பாடி, அபிநயத்தின் விந்தையெலரக் காட்டி, மெல்ல, வீற்றிருந்த என்னருகே வந்து, காதல் 5இளம்பியவக் காமினியை விரும்பிக் கேட்டேன். வேங்கை சன் ? எதிர்பார்த்து நானிருந்த வரம்தான் கேட்டாய்! இளங்கவிரு! அவ்வரமும் இன்னே ஈந்தேன்',

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/31&oldid=989528" இலிருந்து மீள்விக்கப்பட்டது