பக்கம்:காவியப்பரிசு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • * அறிவாலே நாமுலகை

அறிந்தறிந்து மேம்படுமோர் அறச்செருக்கு நெஞ்சகத்தே அமைந்திருத்தல் பிழையில்லை? அறிவாற்றல் என்பதுவும் ஆண்டுபல வாய் வளர்ந்து தெறிப்பட்டு, மெருகேறி, நினைப்பில் உருவேறி, வழிவழியாய் வந்தவொரு வற்றாத செல்வமென்றும், எழில்வாழ்வு நமக்கருளும் இன்பென்றும் உணர்ந்திட்டால், இழிவில்லை! விண்ணகத்தை எட்டிடுமோர் ஆசையிலும் பழியில்லை? எவ்விதத்தும் பரவமில்ல ! . என்றாங்கே மொழிந்திட்ட தென்நெஞ்சம். 3 ஆதலினால் - ஆசையிலே பழுதுண்டோ ? அறிவின் துணைகொண்டு, விசிச் சுழன்றியங்கும் விண்ணுலகைத் தொட்டுவர ஆசைப் படுவதிலே அகந்தைக்கும் இடமுண்டோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/60&oldid=989564" இலிருந்து மீள்விக்கப்பட்டது