பக்கம்:காவியப்பரிசு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரம்மிகுந்த கரவலியால் உழைப்போர் தங்கள் உரிமைகளைப் பறித்தவர் தம் உழைப்பைத் தின்று தரமுயர்ந்த செல்வரென்றும், தருமர் என்றும் தருக்கியவர் செருக்கடக்கி , தரணி தன்னில் கரமுடையோர் யாவருமே உழைத்தே யுண்ணும் - கட்டளையைச் செயல் நடத்தி, கடைப்பட்டோரின் சீரமுயரச் செய்யுமொரு தியாக் கேள்வித் . தீயிடையே இருக்கான திறலோய் வாழி! வையகத்துத் தொழிலாளர் நாளும் தாங்கள் வறுமையொடு போராடும் மருமம் தன்னை ஐயமறத் தெளிந்துணர்ந்து கைகள் கோத்தால், அணிவகுத்தால், படைதிரண்டால், அறப்போர் மூண்டால், கையறுத்த தளைநொறுங்கக் காண்பார்! அன்றே

காசினியும் தமதாகக் காண்பார்! என்றே

மெய்யறிஞன் மார்க்சரைத்தான்! அவன்றன் வாக்கை ' மெய்யுரையாய் ஆக்கிவைத்த மேதரய் வாழி! பகுத்துண்டு பல்லுயிரும் ஒம்பி வாழும்" . பண்பாட்டைப் பாவலர்கள் பல்லாற் றலும் வகுத்துரைத்துச் சென்றதெலாம் நனவே யாகி , வாழ்க்கையிலே வடிவெடுக்க , பிறர் தம் வாழ்வைச் செகுத்துண்டு வாழ்ந்தார்தம் சூழ்ச்சி யாவும் - சென்றெழிய, பொதுவுடைமை நியதி தன்னைப் புகுத்திருந்தது. உலகுக்கே விளக்கம் ஏந்திப் போந்தவனே! லெனினென்னும் புகழோய் வாழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/85&oldid=989573" இலிருந்து மீள்விக்கப்பட்டது