பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை கண்டவர்கள் நெஞ்சுருக ஆட்டம் ஆடிக் கற்றவர்கள் மெச்சுதமிழ்ப் பாட்டுப்பாடி எண்டிசையும் எங்கள் புகழ் கூட நாடி எக்களிப்பு மிக்குவர ஆடு மயிலே பாடும் இசைக்குருகி நெஞ்சு நெகிழ்ந்து பாதமெடுத் தாடுகையில் வஞ்ச மனத்தால் வேடர் பெருவலையை வீசி வருவார் விழாமல் கண்விழித்தே ஆடு மயிலே நாட்டைக் கெடுக்கும்கரிக் கூட்டம் போல்வார் நச்சுக் குணம்படைத்த நாகம் போல்வார் கேட்டுச் செயலனைத்தும் நீக்கி விடவே கெக்கலித்துச் சுற்றிருடம் ஆடு மயிலே