பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை



தமிழைக் கோவிலுள் தடுத்திடும் பகையைத்
தவிடாய்ப் பொடியாய்ச் செய்திடல் வேண்டும்
தமிழன் என்றொரு இனமுண் டாயின்
தயங்குவ தேனோ ? எழுவீர்! எழுவீர்!
—ஆண்டவன்
நாமிடும் சோற்றை ஒருநாள் உண்ட
நாயும் நன்றியை மறவா தன்றோ ?
பூமியில் தோன்றிய நாளாய் உண்டோர்
புன்மைகள் செய்திட முனைவதும் நன்றோ ?
—ஆண்டவன்

16